திருவாஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது. கும்பகோணத்திற்கு தென்கிழக்கே திருவாரூர் செல்லும் வழியில் 24 கி.மீ. தொலைவில் உள்ளது. குடவாசலிலிருந்து நன்னிலம் செல்லும் பேருந்து இத்தலம் வழியே செல்கிறது.
காசிக்குச் சமமாகக் சொல்லப்படும் ஆறு தலங்களுள் ஒன்று. திருவெண்காடு, மயிலாடுதுறை, திருவிடைமருதூர், திருவையாறு, திருச்சாய்க்காடு ஆகியவை மற்ற ஐந்து தலங்கள். திருமகள் திருமாலை அடைய விரும்பி சிவபூசை செய்து விருப்பம் நிறைவேறப் பெற்றமையால் திருவாஞ்சியம் என்று பெயர் பெற்றது. இங்குள்ள குப்த கங்கையில் கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடுவது சிறப்பு. எமன் உலக உயிர்களைக் கொல்லும் பாவத்தைப் நீக்குவதற்காக இத்தலத்து இறைவனை வழிபட்டு இறைவனுக்கு வாகனமாகும் பேறு பெற்றhன். எமனுக்குத் தனி சன்னதி உள்ளது.
இத்தலத்தில் சிவபெருமான் திருவாஞ்சிநாதர் எனவும், இறைவி மங்களநாயகி எனவும் வணங்கப்படுகின்றனர். ஆறுமுகப்பெருமான் இத்தலத்தில் பன்னிரு கரங்களுடன் வள்ளி, தெய்வானை சமேதராய் மயில்மீது அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றார்
.
.
இத்தலத்திற்கு வந்து குப்த கங்கையில் நீராடி இறைவனுக்கு அபிஷேகம் செய்து, ஆயுள் விருத்தி ஹோமம், தில (எள்) ஹோமம் ஏதேனும் செய்து நெய்தீபம் ஏற்றி அன்னதானம் வழங்கினால் சகல பாவங்களும் தீரும்.
தொடர்புக்கு: நிர்வாக அதிகாரி, தொலைபேசி - 04366-228305தில்லைவனம் காசி திருவாரூர் மாயூரம்
பிணத்தை எடுக்கும் வரை கோயிலில் நடைபெறும் பூஜைகள் நிறுத்தி வைக்கப் படும்.
ஆனால் இவ்வூரில் பூஜையை நிறுத்துவதில்லை. எமதர்மனே இங்கு க்ஷத்திர பாலகராக
இருப்பதால் இவ்வாறு நடக்கிறது. மேலும் கோயில் எதிரிலேயே சுடுகாடு இருக்கிறது.
பிணத்தை எரியூட்டியவுடன் அங்கிருந்தபடியே சுவாமியை வணங்கி இறந்தவர் சிவனடி சேர
வேண்டிக்கொள்கிறார்கள்.ஒருவர் இறந்த பின், அவரது பிள்ளைகளால் செய்யப்பட வேண்டிய
செய்து நீண்ட ஆயுள் பெறலாம்.
இருப்பிடம்: கும்பகோணத்திலிருந்து (35 கி.மீ.) நாச்சியார் கோவில் வழியாக
நன்னிலம் செல்லும் பஸ்சில் அச்சுதமங்கலம் ஸ்டாப்பில் இறங்கி, அங்கிருந்து ஒரு
கி.மீ. தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.
போன்: 94424 03926, 93606 02973
முல்லைவனம் கூடல் முதுகுன்றம்
நெல்லை களர்காஞ்சி கழுகுன்றம் மறைக்காடு
அருணைகாளத்தி வாஞ்சியம் என் முக்தி வரும்'
நெல்லை களர்காஞ்சி கழுகுன்றம் மறைக்காடு
அருணைகாளத்தி வாஞ்சியம் என் முக்தி வரும்'
என்ற புராணப்பாடல் ஒன்று உள்ளது. இதன் மூலம் இத்தலத்தின் பெயரை சொன்னாலே முக்தி
கிடைக்கும் என்பது நம்பிக்கை. பொதுவாக கோயில் அருகில் யாராவது இறந்து விட்டால்,பிணத்தை எடுக்கும் வரை கோயிலில் நடைபெறும் பூஜைகள் நிறுத்தி வைக்கப் படும்.
ஆனால் இவ்வூரில் பூஜையை நிறுத்துவதில்லை. எமதர்மனே இங்கு க்ஷத்திர பாலகராக
இருப்பதால் இவ்வாறு நடக்கிறது. மேலும் கோயில் எதிரிலேயே சுடுகாடு இருக்கிறது.
பிணத்தை எரியூட்டியவுடன் அங்கிருந்தபடியே சுவாமியை வணங்கி இறந்தவர் சிவனடி சேர
வேண்டிக்கொள்கிறார்கள்.ஒருவர் இறந்த பின், அவரது பிள்ளைகளால் செய்யப்பட வேண்டிய
பிதுர் காரியங்களை இக்கோயிலில் முன்கூட்டி நாமே செய்து, முக்தி கிடைக்க வழி
தேடிக்கொள்ளலாம். இதற்கு "ஆத்ம தர்ப்பணம்' எனப்பெயர். மேலும் இத்தலத்து
தீர்த்தத்தை பருகினால் மரண அவஸ்தைப்படுகிறவர் களுக்கு சிரமம் நீங்கும்
என்கிறார்கள். இத்தலத்தில் இறந்தாலும், வேறு இடத்தில் இறந்தவர் களுக்கு இங்கு
பிதுர் காரியம் செய்தாலும் சிவனே அவர்களது காதில் பஞ்சாட்சர மந்திரம் (சிவாயநம)
கூறி தன்னுள் சேர்த்து கொள்வதாக ஐதீகம்.
*சண்ட ராகு*
மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து அமிர்தம் வழங்கிய போது, அதை ஸ்வர்பானு என்ற
அசுரன் ஒருவன் தேவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு விட்டான். இதனால் கோபமடைந்த
மகாவிஷ்ணு தன் கையில் இருந்த அகப்பையால் (சட்டுவம்) அவனை வெட்டினார்.
இருந்தாலும் அமுதம் பருகிய அவர்களது உயிர் பிரியவில்லை. விஷ்ணுவிடம் மன்னிப்பு
கேட்ட அவர்கள் நவக்கிரக மண்டலத்தில் ராகு, கேது என்னும் பெயரில் இடம் பெற்றனர்.
இந்த கிரகங் களுக்கு தனித்தனி வடிவம் தரப்பட்டது. இத்தலத்தில் இருவரையும் ஒரே
வடிவமாகத் தரிசிக்கலாம். இந்த அமைப்பை "சண்ட ராகு' என்பர். இவருக்கு தனி சன்னதி
உள்ளது.
அசுரன் ஒருவன் தேவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு விட்டான். இதனால் கோபமடைந்த
மகாவிஷ்ணு தன் கையில் இருந்த அகப்பையால் (சட்டுவம்) அவனை வெட்டினார்.
இருந்தாலும் அமுதம் பருகிய அவர்களது உயிர் பிரியவில்லை. விஷ்ணுவிடம் மன்னிப்பு
கேட்ட அவர்கள் நவக்கிரக மண்டலத்தில் ராகு, கேது என்னும் பெயரில் இடம் பெற்றனர்.
இந்த கிரகங் களுக்கு தனித்தனி வடிவம் தரப்பட்டது. இத்தலத்தில் இருவரையும் ஒரே
வடிவமாகத் தரிசிக்கலாம். இந்த அமைப்பை "சண்ட ராகு' என்பர். இவருக்கு தனி சன்னதி
உள்ளது.
*தல வரலாறு*
எத்தனையோ நல்ல பதவிகள் இருக்கும் போது, தனக்கு மட்டும் ஏன் உயிர்களை எடுக்கும்
பதவியை சிவபெருமான் கொடுத்துள்ளார்' என எமதர்மராஜா மிகவும் வருந்தினார்.
திருவாரூர் சென்று தியாகராஜரிடம் தனது குறைபாட்டை தெரிவித்தார். ஸ்ரீவாஞ்சியம்
சென்று வழிபடும்படி அசரீரி கூறியது. அதன்படி எமன் இத்தலம் வந்து சிவனை நோக்கி
கடும் தவம் இருந்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன் மாசிமாதம் பரணி
நட்சத்திரத்தில் காட்சி தந்து, ""வேண்டும் வரம் கேள்,''என்றார். அதற்கு எமனும்,
""இறைவா! அனைத்து உயிர்களையும் எடுக்கும் பதவி எனக்கு தந்துள்ளதால், எல்லாரும்
என்னை கண்டு பயப்படுகின்றனர். திட்டித் தீர்க்கின்றனர். பல கொலைகளால் தீராத
பிரம்மஹத்தி தோஷம் பிடித்து என்னை வாட்டுகிறது. பாவம் தொடர்கிறது. மன நிம்மதியே
இல்லை,''என்றார். எமனின் கோரிக்கையை ஏற்ற இறைவன், ""எமதர்மனே! இனிமேல் எமன்
உயிரை பறித்து விட்டான் என கூறமாட்டார்கள். நோய் வந்ததாலும், வயதாகி
விட்டதாலும், விபத்து ஏற்பட்டும் இறந்தான் என கூறுவார்கள். இதனால் பழியும்,
பாவமும் இனி உனக்கு கிடையாது. மேலும், நீ தவம் செய்த இந்த தலத்திற்கு ஏதோ ஒரு
விதத்தில் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே வர அனுமதிக்க வேண்டும். இத்தலத்தில்
தரிசனம் செய்தவர்களுக்கு மறுபிறப்பு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
அமைதியான இறுதிக்காலத்தை தர வேண்டும். மேலும் நீ இத்தலத்தின் க்ஷத்திர பாலகனாக
விளங்குவாய். இத்தலத்திற்கு வருபவர்கள் உன்னை முதலில் தரிசனம் செய்த பின்பே
என்னைத் தரிசிப்பார்கள்,''என அருளினார். அதன்படி, இங்கு எமதர்ம ராஜனுக்கே முதல்
வழிபாடு நடக்கிறது.
பதவியை சிவபெருமான் கொடுத்துள்ளார்' என எமதர்மராஜா மிகவும் வருந்தினார்.
திருவாரூர் சென்று தியாகராஜரிடம் தனது குறைபாட்டை தெரிவித்தார். ஸ்ரீவாஞ்சியம்
சென்று வழிபடும்படி அசரீரி கூறியது. அதன்படி எமன் இத்தலம் வந்து சிவனை நோக்கி
கடும் தவம் இருந்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன் மாசிமாதம் பரணி
நட்சத்திரத்தில் காட்சி தந்து, ""வேண்டும் வரம் கேள்,''என்றார். அதற்கு எமனும்,
""இறைவா! அனைத்து உயிர்களையும் எடுக்கும் பதவி எனக்கு தந்துள்ளதால், எல்லாரும்
என்னை கண்டு பயப்படுகின்றனர். திட்டித் தீர்க்கின்றனர். பல கொலைகளால் தீராத
பிரம்மஹத்தி தோஷம் பிடித்து என்னை வாட்டுகிறது. பாவம் தொடர்கிறது. மன நிம்மதியே
இல்லை,''என்றார். எமனின் கோரிக்கையை ஏற்ற இறைவன், ""எமதர்மனே! இனிமேல் எமன்
உயிரை பறித்து விட்டான் என கூறமாட்டார்கள். நோய் வந்ததாலும், வயதாகி
விட்டதாலும், விபத்து ஏற்பட்டும் இறந்தான் என கூறுவார்கள். இதனால் பழியும்,
பாவமும் இனி உனக்கு கிடையாது. மேலும், நீ தவம் செய்த இந்த தலத்திற்கு ஏதோ ஒரு
விதத்தில் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே வர அனுமதிக்க வேண்டும். இத்தலத்தில்
தரிசனம் செய்தவர்களுக்கு மறுபிறப்பு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
அமைதியான இறுதிக்காலத்தை தர வேண்டும். மேலும் நீ இத்தலத்தின் க்ஷத்திர பாலகனாக
விளங்குவாய். இத்தலத்திற்கு வருபவர்கள் உன்னை முதலில் தரிசனம் செய்த பின்பே
என்னைத் தரிசிப்பார்கள்,''என அருளினார். அதன்படி, இங்கு எமதர்ம ராஜனுக்கே முதல்
வழிபாடு நடக்கிறது.
*குப்த கங்கை*
ஒருமுறை கங்காதேவி சிவனிடம்,""மக்கள் அனைவரும் கங்கையில் நீராடி தங்களது
பாவத்தை தீர்ப்பதால் என்னிடம் பாவம் சேர்ந்து விட்டது. இதைப்போக்க தாங்கள் தான்
வழி கூறவேண்டும்,''என வேண்டினாள். அதற்கு சிவன்,""உயிர்களை பறிக்கும் எமனுக்கே
பாவ விமோசனம் தந்த தலத்தில் சென்று பிரார்த்தனை செய்தால் உன்னிடம் சேர்ந்த
பாவங்கள் விலகும்,''என்றார். அதன்படி கங்கை தனது 1000 கலைகளில் ஒரு கலையினை
மட்டும் காசியில் விட்டு விட்டு மீதி 999 அம்சங்களுடன் இங்குள்ள தீர்த்தத்தில்
ரகசியமாக உறைந்திருப்பதாக ஐதீகம். எனவே குப்த கங்கை என்று இங்குள்ள
தீர்த்தத்துக்கு பெயர் வந்தது. எனவே இது காசியை விட பல மடங்கு புண்ணிய
தீர்த்தமாக கருதப் படுகிறது. தற்போது முனி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
மாசிமகத்தன்று இந்த தீர்த்தத்தில் திருவிழா கொண்டாடப்படுகிறது.
பாவத்தை தீர்ப்பதால் என்னிடம் பாவம் சேர்ந்து விட்டது. இதைப்போக்க தாங்கள் தான்
வழி கூறவேண்டும்,''என வேண்டினாள். அதற்கு சிவன்,""உயிர்களை பறிக்கும் எமனுக்கே
பாவ விமோசனம் தந்த தலத்தில் சென்று பிரார்த்தனை செய்தால் உன்னிடம் சேர்ந்த
பாவங்கள் விலகும்,''என்றார். அதன்படி கங்கை தனது 1000 கலைகளில் ஒரு கலையினை
மட்டும் காசியில் விட்டு விட்டு மீதி 999 அம்சங்களுடன் இங்குள்ள தீர்த்தத்தில்
ரகசியமாக உறைந்திருப்பதாக ஐதீகம். எனவே குப்த கங்கை என்று இங்குள்ள
தீர்த்தத்துக்கு பெயர் வந்தது. எனவே இது காசியை விட பல மடங்கு புண்ணிய
தீர்த்தமாக கருதப் படுகிறது. தற்போது முனி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
மாசிமகத்தன்று இந்த தீர்த்தத்தில் திருவிழா கொண்டாடப்படுகிறது.
*கார்த்திகை ஞாயிறு*
தட்சன் நடத்திய யாகத்திற்கு சிவனை அழைக்கவில்லை. இதனால் கோபமடைந்த சிவன், தன்னை
அவமதித்து நடத்திய யாகத்தில் கலந்து கொண்டவர்களை தண்டிக்க தன் அம்சமான
வீரபத்திரரை அனுப்பினார். வீரபத்திரனால் தண்டிக்கப்பட்டவர்களில் சூரியனும்
ஒருவர். இதனால் சூரியன் தன் ஒளி குறைந்து வருந்தி, ஸ்ரீவாஞ்சியம் குப்த
கங்கையில் கார்த்திகை மாதம் முழுவதும் நீராடி சிவனை நோக்கி கடும் தவம்
புரிந்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன், சூரியனுக்கு இழந்த ஒளியை மீண்டும்
தந்தார். பதவி இழந்தவர்கள், பணிமாற்றம் விரும்புவர்கள், பிரிந்த தம்பதியினர்
ஒன்று சேர கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் குப்த கங்கையில் நீராடி குறை
நீங்கப் பெறலாம்.
அவமதித்து நடத்திய யாகத்தில் கலந்து கொண்டவர்களை தண்டிக்க தன் அம்சமான
வீரபத்திரரை அனுப்பினார். வீரபத்திரனால் தண்டிக்கப்பட்டவர்களில் சூரியனும்
ஒருவர். இதனால் சூரியன் தன் ஒளி குறைந்து வருந்தி, ஸ்ரீவாஞ்சியம் குப்த
கங்கையில் கார்த்திகை மாதம் முழுவதும் நீராடி சிவனை நோக்கி கடும் தவம்
புரிந்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன், சூரியனுக்கு இழந்த ஒளியை மீண்டும்
தந்தார். பதவி இழந்தவர்கள், பணிமாற்றம் விரும்புவர்கள், பிரிந்த தம்பதியினர்
ஒன்று சேர கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் குப்த கங்கையில் நீராடி குறை
நீங்கப் பெறலாம்.
*இரண்டாம் நாளே தீர்த்தவாரி*
எல்லாக் கோயில்களிலும் பிரம்மோற்ஸவம் முடிந்த பிறகே தீர்த்தவாரி நடத்தப் படும்.
அன்று சுவாமியை கோயில் சார்ந்த தீர்த்தத்தில் நீராட்டுவர். இத்தலத்தில்,
தீர்த்தத்துக்கு மிகவும் மகிமை வாய்ந்தது என்பதால், மாசிமகம் பிரம்மோற்ஸவத்தின்
இரண்டாம் நாளே தீர்த்தவாரியை நடத்தி விடுவர். இரண்டாம் நாளே இங்கு தீர்த்தவாரி.
அன்றைய தினம் வாஞ்சி நாதர் எமன் வாகனத்தில் உலாவருவார். கடைசி நாள் முருகனுக்கு
உற்சவம் நடைபெறும். கார்த்திகை ஞாயிற்று கிழமைகளில் அதிகாலை வேளையிலும்
தீர்த்தவாரி நடப்பதுண்டு. ஆடிப்பூரத்தை ஒட்டியும் 10 நாள் திருவிழா உண்டு.
ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனை உண்டு.
அன்று சுவாமியை கோயில் சார்ந்த தீர்த்தத்தில் நீராட்டுவர். இத்தலத்தில்,
தீர்த்தத்துக்கு மிகவும் மகிமை வாய்ந்தது என்பதால், மாசிமகம் பிரம்மோற்ஸவத்தின்
இரண்டாம் நாளே தீர்த்தவாரியை நடத்தி விடுவர். இரண்டாம் நாளே இங்கு தீர்த்தவாரி.
அன்றைய தினம் வாஞ்சி நாதர் எமன் வாகனத்தில் உலாவருவார். கடைசி நாள் முருகனுக்கு
உற்சவம் நடைபெறும். கார்த்திகை ஞாயிற்று கிழமைகளில் அதிகாலை வேளையிலும்
தீர்த்தவாரி நடப்பதுண்டு. ஆடிப்பூரத்தை ஒட்டியும் 10 நாள் திருவிழா உண்டு.
ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனை உண்டு.
*இன்று சந்திர கிரகணம்*
கிரகண காலத்தில் எல்லா கோயில்களின் நடைகளும் அடைக்கப்படுவது வாடிக்கை. ஆனால்,
திருவாரூர் அருகிலுள்ள ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயில்
திறக்கப்பட்டிருக்கும். கிரகண நேரத்தில் சிவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
நடத்தப்படும். கிரகணத்தை ஒட்டி இந்தக் கோயிலை சிறப்பு தரிசனம் செய்வோம்.
திருவாரூர் அருகிலுள்ள ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயில்
திறக்கப்பட்டிருக்கும். கிரகண நேரத்தில் சிவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
நடத்தப்படும். கிரகணத்தை ஒட்டி இந்தக் கோயிலை சிறப்பு தரிசனம் செய்வோம்.
*புண்ணியத் துளிகள்...*
* 110 அடி உயரம் கொண்ட ஐந்து நிலை ராஜ கோபுரத்தை கி.பி.850ல் ராஜேந்திர சோழன்
கட்டியுள்ளான்.
* ஸ்ரீயை வாஞ்சித்து(ஸ்ரீ என்ற மகாலட்சுமியை அடைய விரும்பி) திருமால் தவம்
இருந்ததால் இத்தலம் "ஸ்ரீவாஞ்சியம்' ஆனது.
* இங்கு சிவனே அனைத்துமாக அருள்பாலிப்பதால், நவக்கிரகங்களுக்கு சன்னதி இல்லை.
* கோயிலின் அக்னி மூலையில் தெற்கு நோக்கி எமனும், சித்ரகுப்தனும் ஒரே
சன்னதியில் அருளுகின்றனர். எமனுக்கு வடை மாலை சாத்தி வழிபடுகின்றனர்.
* எமதர்மனை சாந்திசெய்யும் விதத்தில், இங்கு ஆயுள் ஹோமம், சஷ்டியப்த பூர்த்திசெய்து நீண்ட ஆயுள் பெறலாம்.
* அஷ்டபுஜ மகிஷாசுரமர்த்தினி மிகவும் சக்தி வாய்ந்தவள்.
* தல விநாயகரை அபயங்கர விநாயகர் என்பர். தல விருட்சம் சந்தன மரம்.
* மகம், பூரம், சதயம், பரணி நட்சத்திரத்தினர், மேஷம், சிம்மம், கும்ப ராசி
அல்லது லக்னம் கொண்டவர்கள் தங்கள் தோஷங்கள் நீங்க வழிபாடு செய்யலாம்.
திறக்கும் நேரம் : காலை 6 - 12 மணி, மாலை 3 - 8 மணி.இருப்பிடம்: கும்பகோணத்திலிருந்து (35 கி.மீ.) நாச்சியார் கோவில் வழியாக
நன்னிலம் செல்லும் பஸ்சில் அச்சுதமங்கலம் ஸ்டாப்பில் இறங்கி, அங்கிருந்து ஒரு
கி.மீ. தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.
போன்: 94424 03926, 93606 02973
இறைவர் திருப்பெயர் : ஸ்ரீவாஞ்சியநாதர்
இறைவியார் திருப்பெயர் : வாழவந்தநாயகி,
மங்களநாயகி
தல மரம் : சந்தனம்
தீர்த்தம் : குப்த கங்கை,யம தீர்த்தம்
வழிபட்டோர் : திருமால்,
பிரமன், யமன், இந்திரன், பராசரர், அத்ரி
தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் -
வன்னிகொன்றை மதமத்தம்.
2. அப்பர் - படையும் பூதமும் பாம்பும்.
3. சுந்தரர் - பொருவனார் புரிநூலர்- இறைவன்
திருக்கயிலையிலிருந்து இத்தலத்திற்கு வந்ததால்,
அம்பிகை "வாழ வந்த நாயகி"யாக
இத்தலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள் என்ற செய்தி இத்தல புராணத்தில்
காணப்படுகின்றது. பராசர முனிவர் இத்தலத்தில் நீராடி, வீரதனு மன்னனைப் பற்றிருந்த
பிரமகத்தியைப் போக்கிய சிறப்பால் இத்தீர்த்தம் அம்முனிவர் பெயரால் விளங்குகின்றது.
அத்திரி முனிவர் நீராடித் தத்தாத்ரேயரை மகவாகப் பெற்ற சிறப்பால் அத்திரி
தீர்த்தம் என்று வழங்குகிறது. பூமகள்,
திருமகள் இருவர்க்கும் ஏற்பட்ட பிணக்கால்
திருமகள் திருமாலை விட்டுப் பிரிந்தாள் என்றும், திருமால் திருவாஞ்சியத்தை
அடைந்து இவ்விறைவனை வழிபட்டு, திருமகளை வாஞ்சித்துப் பெற்றதால் திருவாஞ்சியம்
எனப் பெயர் பெற்றது என்றும் தலபுராணம் கூறுகிறது. உரோமச முனிவர் தவம் செய்து
முத்திப் பெற்ற வரலாறு புராணத்தில் கூறப்படுகிறது. திருமால் வழிபட்டுத்
திருமகளை அடைந்ததோடு, காத்தல் தொழிலைப் பெற்றார். நான்முகன் வழிபட்டுப் படைத்தல் தொழிலைப்
பெற்றார். இந்திரன் சாபம் நீங்கப் பெற்றான். மகுடவர்த்தனன் என்னும் மன்னன்
பகைவர்களால் உண்டாகும் அச்சம் நீங்கப்பெற்றான். மகாதனு என்ற மன்னன் அரக்க
உருவம் நீங்கி ஆனந்த வடிவமுற்றான். விருட்சி என்பவனின் மனைவி சாருமதி கயநோய்
நீங்கப் பெற்றாள். தர்மத்துவசன் என்ற வணிகன் நற்கதி எய்தினான்.
- இயமன்
எல்லா உயிர்களையும் கவரும் தன் பாவம் தீர இத்தலத்து இறைவரை வழிபட்டுப் பாவம்
நீங்கப்பெற்று, இவ்விறைவனுக்கு வாகனமாகும் பேற்றையும் பெற்றான். இயமனுக்கு மூலஸ்தானம்
தனியே உள்ளது. இறைவன் இயமனுக்கு காட்சி கொடுத்து அருள்புரிந்த ஐதீகத்
திருவிழா மாசி மாதம் பரணியில் நிகழ்கின்றது. இத்தலத்தில் வாழ்கின்ற /
இறக்கின்றவர்களுக்கு எமவாதனை இல்லை எனவும், இங்கு இறப்போர் வலச் செவியில் இறைவன் ஐந்தெழுத்து
(பஞ்சாட்சரம்) ஓதி சிவலோகத்தில் சேர்ப்பித்துக் கொள்கிறான் எனவும் தலபுராணம்
கூறுகின்றது.
- இத்தல
தீர்த்தம் (குப்தகங்கை), அத்திரி,
பரத்துவாசர்,
ஜமதக்கினி,
விசுவாமித்திரர்,
வசிட்டர்,
கௌதமர் ஆகியோர் நிறுவியருள் பெற்ற
சிறப்புடையது. காசியில் கங்கைதன்னிடம் மக்கள் போக்கிக்கொள்ளும் பாவங்கள்
சேர்ந்ததைத் தீர்க்க கங்கை வந்து இத்தலத்தில் தங்கி வழிபட்டுப் பாவங்களை
நீக்கிக் கொண்டாள். இறைவன் தீர்த்தம் கொடுக்கும் சிறப்பால் உயர்வு பெற்ற
சிறப்புடையத் தலமாகும். நான்கு யுகங்களில் முறையே புண்ணிய தீர்த்தம், அத்திரி தீர்த்தம், பராசர தீர்த்தம், முனி தீர்த்தம் என்ற
நாமங்களைக் கொண்டு விளங்கியுள்ளது. கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் இறைவன்
இங்குத் தீர்த்தம் கொடுத்தருளுகின்றார். பஞ்சமா பாதகம், பிரமகத்தி, நோய்கள், பிற பீடைகள், சிவத்துரோகம் முதலிய
பாவங்கள் அனைத்தையும் நீக்கி வெற்றி,
ஆனந்தம்,
வீடுபேறு முதலிய பயன்களை அளிக்கவல்லது இத்தலம்.
இத்தீர்த்தக் கரையில் தருமம் செய்வோர் சிறந்த பலன்களைப் பெறுவர்.
- இத்தலம்
மூவர்த் தேவாரத் திருப்பதிகம் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 70-வது திருத்தலமாகும்.
மாணிக்கவாசகரும் கீர்த்தித் திருவகவலிலும்,
திருக்கோவையாரில் 268-வது பாடலிலும் இத்தலத்தைக்
குறித்துள்ளார். இஃது மூர்த்தி,
தலம்,
தீர்த்தம் என்ற முச்சிறப்பிலும் சிறந்து
விளங்குகிறது. இத்தலம் ஸ்கந்தபுராணம்,
பிரும்மாண்டபுராணம், ஆக்நேயபுராணம் ஆகிய வடமொழி
நூல்களில் மிகவும் சிறப்புடன் போற்றப்பட்டுள்ளன. பாவங்களை ஏற்று அகற்றும்
கங்கா நதியானவள் தனது 1000 கலைகளில் ஒரு கலையை மட்டும் காசியில் வைத்து மீதி 999 கலைகளுடன் இத்தல
தீர்த்தத்தில் வசிப்பதால் இத்தல தீர்த்தம் "குப்தகங்கை" என
வழங்குகின்றது. தல விருட்சம் சந்தனமாகும்.
- அருணகிரிநாதர்
அருளிய திருப்புகழ் இரண்டு உள்ளன. தலபுராணங்கள் வடமொழியிலும், தமிழிலும் உள்ளன. தமிழில்
தலபுராணம் பாடியவர் களந்தைக் குமரன் ஆவார். சிவராமசுந்தரம் பிள்ளை பாடிய
மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ் உள்ளது. இராமலிங்க சுவாமிகள் பாடலும், முத்துசாமி தீட்சிதர்
கீர்த்தனையும் உள்ளன. தருமை குருமுதல்வர் ஸ்ரீகுருஞானசம்பந்தர்
சிவபோகாசாரத்தில் முத்தித் தலங்களில் ஒன்றாக இதனைக் குறித்தருளுகிறார்.
- இத்தலத்தில்
27 கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டுளன. பிற்கால சோழர்கள் கல்வெட்டுகள்
ஏழும், பாண்டியர்கள் கால கல்வெட்டுகள் ஏழும்,
நாயக்கர்கள் கால கல்வெட்டு ஒன்றும், ஏனைய பொது. கல்வெட்டுக்களில்
முறையே - குலோத்துங்கச் சோழவள நாட்டில் பனையூர் நாட்டில் ஸ்ரீவாஞ்சியம் என்ற
குறிப்பு உள்ளது. இராஜகம்பீர சதுர்வேதி மங்கலம் என்றும் இவ்வூர்
குறிக்கப்பட்டுள்ளது. விற்பனை நில தானம்,
வரி தள்ளுபடி முதலிய தகவல்கள் உள்ளன.
இக்கோவில் மயிலாடுதுறை-பேரளம் இரயில் பாதையில் நன்னிலம் இரயில் நிலையத்திற்கு மேற்கே 9கீ.மீ.தூரத்தில் உள்ளது. நன்னிலத்திலிருந்து பஸ் வசதி உள்ளது. (ஸ்ரீவாஞ்சியம் என்றும் வழங்கப்படுகின்றது).